யோகாசனம் - உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு : 3 உலக சாதனை படைத்த ஆசிரியர்
Jun 26 2018 2:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
யோகாசனம் மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த டிராகன் ஜெட்லி என்பவர், மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற கலையை கற்றுக் கொடுத்து வருகிறார். 25 முறை தேசிய, உலகசாதனை மற்றும் லிம்கா சாதனைகளை புரிந்த, அவர் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு, 3 உலகசாதனையை நிகழ்த்தியுள்ளார். 20 அடி உயர பெஞ்ச் மேல் தலைகீழாக 2 நிமிடம் 6 வினாடிகள் நின்று, தனது முந்தைய சாதனையை முறியடித்தார். அதேபோன்று ஐஸ்கட்டி மீது நின்றபடி வாயில் 14 எரியும் மெழுகுவர்த்திகளை 1 நிமிடம் 4 வினாடிகள் வைத்துக்கொண்டு புதிய சாதனை நிகழ்த்தினார். மற்றொரு சாதனையாக ஐஸ்கட்டிகளின் மீது பின்புறக்கைகளினால் 46 வினாடிகளில் 72 தண்டால்களை எடுத்தார். உலக சாதனை நிகழ்த்திய ஆசிரியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.