இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு - கோலி தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு
Jul 18 2018 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் அஸ்வின் மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 20 ஓவர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் போட்டி்த தொடரில் தோல்வி அடைந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ளார். இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிற்கும் இடம் கிடைத்துள்ளது. மற்றொரு தமிழக வீரரான அஸ்வின் மற்றும் ஆல்ரவுடண்டர், ரவீந்திரஜடேஜாவுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
18 பேர் கொண்ட அணியில், விராட் கோலி, ஷிகர் தவான், கே.எல். ராகுல், விஜய், புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், பாண்ட்யா, இஷாத் சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ், பும்ரா, சர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.