இனப்பாகுபாட்டை ஒருபோதும் ஏற்க முடியாது - சானியா மிர்சா : ஜெர்மனி கால்பந்து வீரர் மெசூத் ஓஸிலுக்கு சானியா ஆதரவு
Jul 24 2018 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இனப்பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி ஜெர்மனி கால்பந்து வீரர் மெசூத் ஓஸில், அணியில் இருந்து விலகிய சம்பவம் கவலைக்குரிய நிகழ்வு எனக் கூறியுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இவ்விவகாரத்தில் மெசூத் ஓஸிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி கால்பந்து வீரரான மெசூத் ஓஸில், துருக்கி, ஜெர்மனி ஆகிய இரு நாட்டு குடியுரிமைகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், மெசூத் ஓஸில், துருக்கி அதிபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து இனப்பாகுபாடு காட்டப்படுவதாகவும், அவமரியாதை அளிக்கப்படுவதாகவும் கூறிய அவர், ஜெர்மனி அணியில் இருந்து விலகினார்.
இதை அறிந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இது கவலைக்குரிய நிகழ்வு எனவும், இனப்பாகுபாட்டை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மெசூத் ஓஸிலின் அறிக்கைகளையும் பதிவிட்டுள்ள அவர், இவை அனைத்தும் உண்மை என்றால், இச்சம்பவம் மிகவும் வேதனைக்குரியதே என்றும் சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.