இனப்பாகுபாட்டை ஒருபோதும் ஏற்க முடியாது - சானியா மிர்சா : ஜெர்மனி கால்பந்து வீரர் மெசூத் ஓஸிலுக்கு சானியா ஆதரவு

Jul 24 2018 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

இனப்பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி ஜெர்மனி கால்பந்து வீரர் மெசூத் ஓஸில், அணியில் இருந்து விலகிய சம்பவம் கவலைக்‍குரிய நிகழ்வு எனக்‍ கூறியுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இவ்விவகாரத்தில் மெசூத் ஓஸிலுக்‍கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி கால்பந்து வீரரான மெசூத் ஓஸில், துருக்கி, ஜெர்மனி ஆகிய இரு நாட்டு குடியுரிமைகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், மெசூத் ஓஸில், துருக்கி அதிபருடன் எடுத்துக்‍கொண்ட புகைப்படத்தை வைத்து இனப்பாகுபாடு காட்டப்படுவதாகவும், அவமரியாதை அளிக்கப்படுவதாகவும் கூறிய அவர், ஜெர்மனி அணியில் இருந்து விலகினார்.

இதை அறிந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இது கவலைக்குரிய நிகழ்வு எனவும், இனப்பாகுபாட்டை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மெசூத் ஓஸிலின் அறிக்கைகளையும் பதிவிட்டுள்ள அவர், இவை அனைத்தும் உண்மை என்றால், இச்சம்பவம் மிகவும் வேதனைக்குரியதே என்றும் சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00