மதுரையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி : ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Jul 25 2018 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு துப்பாக்கி சுடும் கழகம் சார்பில், 44-ஆவது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் நேற்று தொடங்கி, வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், ரைபிள், பிஸ்டல் வகைகளில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் என தனிதனியே நடைபெற்றது. இதில், தேர்வாகும் வீரர்கள் அடுத்த கட்டமாக தேசிய அளவிலான தகுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.