குற்றாலத்தில் தனியார் அருவியில் எம்.எஸ்.டோனி உற்சாகத்துடன் குளித்து மகிழ்ச்சி : ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்
Aug 5 2018 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குற்றாலம் அருகே தனியார் அருவியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி உற்சாகத்துடன் குளித்து மகிழந்தார். அப்போது அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர்நகர் பகுதியில், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை துவங்கி வைப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, நேற்று குற்றாலம் அருகேயுள்ள குண்டாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள ஒரு தனியார் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தார். அப்போது அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனைத்தொடர்ந்து, தச்சநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சென்ற தோனி, அங்கு மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை தோனி தொடங்கி வைத்தார். தோனியின் நெல்லை வருகையையொட்டி, அவரை பார்ப்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.