ஆசிய விளையாட்டுப் போட்டி : ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் - 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம்
Aug 28 2018 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிர் பேட்மிண்டனில் P.V.சிந்து, ஒற்றையர் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார். சாய்னா நேவால், வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 88 புள்ளி பூஜ்யம் 6 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தின் தருண் அய்யாசாமி 2-வதாக ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் steeplechase ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேவால், தைவானைச் சேர்ந்த Tai Tzu Ying-யிடம் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் வென்றார். பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் 1982-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பட்டம் பெற்றிருப்பது, இதுவே முதல் முறை. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் P.V.சிந்து, ஜப்பானின் Akane Yamaguchi -யை 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்று, இறுதிப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆடவர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், பாகிஸ்தானைச் சேர்ந்த தன்வீர் அகமதுவை வீழ்த்தி, காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என 41 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.