இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி : கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு
Sep 3 2018 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழா ஜகர்த்தாவில் உள்ள ஜி.பி.கே. மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று, நிறைவுபெற்றது.
இதில், பல வண்ணங்களில் லேசர் ஒளி வெள்ளத்தில், மின்னிய கலைவிழா காண்போரை வெகுவாக கவர்ந்தது.
கடந்த 15 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில், 45 நாடுகளைச் சேர்ந்த 312 வீரர்கள், 260 வீராங்கனைகள் உள்பட 572 பேர் கலந்துகொண்டனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் 132 தங்கம், 92 வெள்ளி மற்றும் 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சீனா. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் இந்தியா 8-ஆவது இடத்தை பிடித்தது.
இந்த நிறைவு விழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணிவகுப்பு நடத்தினர். இதில், இந்தியாவை மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேசியக்கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்தினார். இதையடுத்து, 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது.