நடப்பு ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு - விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது
Sep 21 2018 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
இந்திய அரசு சார்பில், விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவோருக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது, துரோணாச் சாரியார் விருது, அர்ச்சுனா விருது, தயன் சந்த், ராஷ்டீரிய கே ப்ரோட்சாஹன் புரஸ்கர் ஆகிய 5 விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பழுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
குத்துச்சண்டை வீரர் சுபேதர் செணன்டா, பளுதூக்குதல் வீரர் விஜய் சர்மா, டென்னிஸ் வீரர் ஸ்ரீனிவாசா ராவ், தடகள வீரர் சுக்தேவ் சிங், ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தடகள வீராங்கனை ஹீமா தாஸ் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது. தயன் சந்த் விருது 5 பேருக்கும், ராஷ்டீரிய கே ப்ரோட்சாஹன் புரஸ்கர் விருது 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.