ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - பங்களாதேஷ் அணியை தோற்கடித்து 7-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைற்றியது
Sep 29 2018 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் அணியுடனான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 48.3 ஓவரில் 222 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஜாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 223 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது தவான் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தோனி 36 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா, புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 227 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 7-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.