இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் - பளுதூக்குதல், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இந்திய அணியினர் அபாரம்
Oct 10 2018 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கு 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
206 நாடுகள் பங்கேற்றுள்ள 3-வது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் 62 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா மொத்தம் 274 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். மிசோரமை சேர்ந்த 15 வயதான ஜெர்மி லால்ரினுங்கா உலக இளையோர் மற்றும் ஆசிய இளையோர் போட்டியில் ஏற்கெனவே வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் 236 புள்ளி 5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அரியானாவை சேர்ந்த 16 வயதான மானு பாகெர் ஏற்கெனவே உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.