சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடர் : ரோமான்ய வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்
Oct 29 2018 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடரில், ரோமான்ய வீரர் Marius Copil-வை தோற்கடித்து, ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிட்ஸர்லாந்தின் Basel நகரில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர், ரோமான்ய வீரர் Marius Copil-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் Marius Copil-ஐ தோற்கடித்து, 99-வது ATP பட்டம் வென்று அசத்தினார்.
ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற Vienna Open சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில், தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை, 5-ஆம் நிலை வீரரான ஜப்பானின் Kei Nishikori எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஆண்டர்கள், 6-க்கு 3, 7-க்கு 6 என்ற நேர் செட்கணக்கில் Nishikori-யை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதனிடையே, சிங்கப்பூரில் நடைபெற்ற டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில், அமெரிக்க வீராங்கனை Sloane Stephens-வை, உக்ரைனின் Elina Svitolina-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் செட்டை 3-க்கு 6 என்ற செட்கணக்கில் Stephens வென்றார். பின்னர் சுதாரித்துக்கொண்ட Svitolina, 6-க்கு 2, 6-க்கு 2 என அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.