கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஆஸ்திரேலியாவில் பதாகைகள் ஏந்தி ஆதரவு கோரிய தமிழக இளைஞர்கள்
Nov 26 2018 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், தமிழக இளைஞர்கள் 4 பேர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி, சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட தமிழக இளைஞர்கள் 4 பேர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தனர். "டெல்டாவை பாதுகாப்போம்", "தமிழக விவசாயிகளை பாதுகாப்போம்", "கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர்" ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மைதானத்தில் நிதி திரட்டினர்.