கரூரில் மாநில அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான யோகாசனம், திருமந்திரம் விளம்புதல் போட்டி : ஏராளமானோர் பங்கேற்பு
Jan 7 2019 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் தமிழும் - யோகமும் என்ற தலைப்பில் மாநில அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான யோகாசனம், திருக்குறள் மற்றும் திருமந்திரம் விளம்புதல் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஸ்கூல் யோகா அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மற்றும் கரூர் ஸ்ரீசங்கரா யோகா மையம் இணைந்து நடத்திய யோகா போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளியில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு வயதினருக்கு ஏற்ப, பல பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் கருடாசனம், குமராசனம், சிரசாசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து அசத்தினர். மேலும், திருக்குறள் மற்றும் திருமந்திரம் விளம்புதல் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், போட்டியில் முதல் 3-இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில் அகில உலக யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், அகில உலக யோகா திருவிழாவின் ஒரு பகுதியாக வாழும் கலை என்ற அமைப்பின் சார்பில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று சேதுபந்தன ஆசனம் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். ஏற்கனவே சென்னையில் இந்த ஆசனத்தை ஆயிரத்து 281 பேர் செய்துள்ளனர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக, இந்த நிகழ்ச்சி புதுச்சேரியில் நடத்தப்பட்டது.