ஹர்திக் பாண்டியா மீதான தடையை நீக்‍கியது பி.சி.சி.ஐ - நியூசிலாந்துக்‍கு எதிரான தொடரில் சேர்க்‍க முடிவு

Jan 25 2019 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீதான தடையை பிசிசிஐ நீங்கியதைத் தொடர்ந்து, நியூஸிலாந்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்‍கெட் தொடரில் அவரை சேர்க்‍க தேர்வுக்‍குழு முடிவெடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, இருவரையும் அணியிலிருந்து இடை நீக்கம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இருவரும் அளித்த விளக்‍கத்தை ஏற்றுக்‍கொண்ட பிசிசிஐ, அவர்கள் மீதான இடைக்காலத் தடையை நேற்று திரும்பப் பெற்றது. இந்நிலையில், தடை நீங்கியதை அடுத்து, ஹர்திக் பாண்டியாவை நியூஸிலாந்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்‍கெட் தொடரில் சேர்க்‍க தேர்வுக்‍குழு முடிவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00