இந்தியாவுடனான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அபார வெற்றி
Jan 31 2019 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுடனான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி, Hamilton நகரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நியூஸிலாந்து வீரர்களின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இதனால் இந்திய அணி, 30 புள்ளி 5 ஓவர்களில் 92 ரன்களிலேயே ஆட்டமிழந்தது.
93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 14 புள்ளி இரண்டு ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 93 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.