திருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை
Apr 22 2019 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
சென்னையை சேர்ந்த உத்ராஸ்ரீ என்ற மாணவி, இன்று தான் பயின்ற யோகாசனத்தில் சாதனை படைக்கும் நோக்கில், ஆணிகள் பதிக்கப்பட்ட ஆணிபடுக்கையில் பத்மாசனத்தில் ஒரு மணிநேரம் தியானத்தில் அமர்ந்து புதிய சாதனையினை நிகழ்த்தினார். திருச்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சாதனை புத்தக நிர்வாகிகள், சர்வதேச பண்பாட்டு மற்றும் யோகாசன அகாடமி நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனை பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்ததுடன், சர்வதேச பண்பாட்டு மற்றும் யோகாசன அகாடமியின் தலைவரும், யோகாகுருவுமான கிருஷ்ணகுமார், சாதனை மாணவிக்கு சான்றிதழை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்துக்கொண்டு சாதனை மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.