சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள்
Apr 26 2019 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் செய்த புதிய சாதனைகள் டிராகன் ஜெட்லி, லிம்கா போன்ற புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
திருச்சியில், நரேன்சிவா என்ற 3 வயது சிறுவன் மெடிசன் பந்துமீது நின்றபடி, 2 நிமிடம் 45 வினாடிகளில் 36 திருக்குறளை கூறி சாதனை படைத்துள்ளார். இதேபோல் அர்ஜுன் என்ற சிறுவன் மெடிசன் பந்துமீது நின்றபடி, 1 நிமிடம் 14 வினாடிகளில் 194 நாடுகளின் பெயர்களை ஒப்புவித்து புதிய சாதனை நிகழ்த்தினார். இந்த இரு சாதனைகளும், டிராகன் ஜெட்லி சாதனை புத்தகத்தில் இடம்பெற்றன.
திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர், அருண்சுந்தர் 1 நிமிடம் 36 வினாடிகளில் தனித்தனியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களை உடைத்தும், 60 கான்கிரீட் கற்களை 1 நிமிடம் 56 வினாடிகளில் கால்களால் உடைத்தும் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
சபரி என்ற கல்லூரி மாணவர், தனித்தனியே வைக்கப்பட்டிருந்த 15 செங்கற்களை அடுக்கி வைத்து புஷ்-அப் செய்தும் கையால் உடைத்தும், 100 அடிதூரம் தலைகீழாக கைகளை ஊன்றியபடி நடந்துவந்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இதேபோல், சேதுபதி என்ற கல்லூரி மாணவர், 3 செங்கற்களை தனது நெற்றியில் 34 வினாடிகள் வைத்து புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார். சாதனை புத்தக பார்வையாளர்கள் மற்றும் ரோட்டரி, ஜேசிஐ நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைகள், ஜெட்லி புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிம்கா சாதனை புத்தகம் மற்றும் எவரெஸ்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. சாதனை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.