சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு - இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் அறிவிப்பு
Jun 10 2019 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுன்டராக இடம்பெற்றவர் யுவராஜ்சிங். 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது அணியில் முக்கிய பங்காற்றியவர். புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இடம்பிடித்து விளையாடினார். எனினும் பல ஆட்டங்களில் சோபிக்க தவறியதால் அதன்பிறகு பலமுறை அணியில் இடம் பெறவில்லை. 2016ம் ஆண்டுக்கு பிறகு அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக செயல்பட்டாலும் 2017க்கு பிறகு ஐபிஎல்லிலும் ஓரங்கட்டப்பட்டார். ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை நிச்சயம் அணியில் மீண்டும் இடம்பிடிக்க முயல்வேன் என்று கூறினாலும், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதால் அவரால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.