உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து
Jun 11 2019 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அப்போது மழை குறுகீட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், Bristol நகரில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில், பங்களதேஷ் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.