லடாக்கில் மகேந்திர சிங் தோனிக்கு உற்சாக வரவேற்பு - ராணுவ மருத்துவமனைக்கு சென்று வீரர்களின் நலம் விசாரித்தார்
Aug 15 2019 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தினத்தை ஒட்டி, ராணுவ சீருடையில் லடாக் சென்ற மகேந்திர சிங் தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற தோனி, வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்து, அவர்களுடன் நேரத்தை செலவிட்டார்.
ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ள தோனி, ஸ்ரீநகர் அருகே கும்மு என்ற இடத்தில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சியும் பெற்று வருகிறார்.
சுதந்திர தினத்தை ஒட்டி, லடாக் சென்ற தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ ஜெனரல் மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் லடாக்கில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தோனி, சியாச்சின் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.