தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி - திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன்
Aug 16 2019 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து அந்த அணி 126 ரன் எடுத்தது. அதிக பட்சமாக சசிதேவ் 44 ரன்னும், முருகன் அஸ்வின் 28 ரன்னும், கவுசிக் காந்தி 22 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக ஜெகந்நாத் கவுசிக், அபினவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்தும், ஜெகதீசனும் ஆடினர். ஆரம்பமே திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், நிஷாந்த் 4 ரன்னிலும், ஜெகதீசன் மற்றும் சதுர்வேத் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் களம் வந்த சுமந்த் ஜெயின் மற்றும் மோகன் அபினவ், நேர்த்தியாக விளையாடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். சுமந்த் ஜெயின் 46 ரன்னில் வெளியேறவே, அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து. இதனால் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கில்லிஸ் தரப்பில் அதிக பட்சமாக பெரியசாமி 5 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.