இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு - தலைமை பயிற்சியாளராக தொடருவார் என, கபில் தேவ் தலைமையிலான தேர்வுக் குழு அறிவிப்பு
Aug 16 2019 8:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடருவார் என, கபில் தேவ் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம், உலகக்கோப்பை உடன் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையிலான, குழு அமைக்கப்பட்டது.
மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில், இப்பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்த டாம் மூடி, மைக் ஹெஸன், கேரி கிர்ஸ்டன், ஜெயவர்த்தனே, ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புத், ரவிசாஸ்திரி ஆகியோருக்கு இன்று நேர்காணல் தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில், கபில் தேவ் தலைமையிலான குழு, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக, ரவிசாஸ்திரியை மீண்டும் நியமனம் செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2021-ம் ஆண்டு வரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே நீடிப்பார் என்றும், தேர்வு குழுத் தலைவர் கபில்தேவ் கூறியுள்ளார்.