இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு - 2021 வரை பயிற்சியாளராக தொடருவார் என கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு அறிவிப்பு
Aug 17 2019 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, ரவி சாஸ்திரி தொடருவார் என, கபில்தேவ் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம், நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய, கபில்தேவ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்த டாம் மூடி, மைக் ஹெஸன், கேரி கிர்ஸ்டன், ஜெயவர்த்தனே, ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புத், ரவிசாஸ்திரி ஆகியோருக்கு, மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில், நேற்று நேர்காணல் தேர்வு நடைபெற்றது. பின்னர், கபில்தேவ் தலைமையிலான குழு, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக, ரவி சாஸ்திரியை மீண்டும் நியமனம் செய்து, அறிவிப்பு வெளியிட்டது. 2021-ம் ஆண்டு வரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே நீடிப்பார் என்றும், தேர்வு குழுத் தலைவர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.