ராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்.எஸ்.தோனி : பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்
Aug 18 2019 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.
இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கு எம்.எஸ்.தோனி கடந்த மாதம் 31-ம் தேதி காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். தற்போது 15 நாட்கள் ராணுவ பயிற்சியை நிறைவு செய்துள்ளார். பயிற்சியின்போது காஷ்மீரின் உரி, அனந்தநாக் பகுதிகளுக்கும் சென்று அவர் பணிகளை ஆற்றியுள்ளார். இதையடுத்து பயிற்சி முடித்து இன்று அவர் டெல்லி திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.