காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
Aug 18 2019 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரத்தில் கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்க மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள படூர் பகுதியில் மாநில அளவிலான குத்து சண்டை போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கிராமப்புற மக்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வம் குறைந்து கொண்டே வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் திறமையை வெளிப்படுத்தி அதனை ஊக்குவிக்கும் வகையில் இந்தபோட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.