வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு
Aug 19 2019 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்திருப்பதையடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த மர்ம மின்னஞ்சலில், இந்திய அணி வீரர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.