விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜுனா விருது
Aug 20 2019 7:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டிங் வீரரான பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல்ரத்னா, துரோணாச்சாரியா, தயன்சந்த் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, பாடி பில்டிங் வீரரான தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பேட்மிண்டன் பிரிவில் விமல்குமாருக்கும், டேபிள் டென்னிஸ் பிரிவில் சந்தீப் குப்தாவுக்கும், தடகள பிரிவில் மொகிந்தர்சிங் தில்லாங்கிற்கும் துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகின்றன. தயான்சந்த் விருது ஹாக்கி வீரர் மான்வேல் பாட்ரிக்ஸ், டேபிள் டென்னிஸ் வீரர் அரூப் பசக் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படுகின்றன. விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.