சர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது
Aug 22 2019 8:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒலிம்பிக் போட்டியில் அலை சறுக்குப்போட்டி இடம்பெற்றுள்ளதையடுத்து, சர்வதேச அளவிலான அலை சறுக்குப்போட்டி சென்னையில் வரும் 23-ம் தேதி முதல் நடைபெற இருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அலைசறுக்கு விளையாட்டு போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் சென்னையை அடுத்த கோவளத்தில் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வெவ்வேறு பிரிவுகளில் அலைசறுக்குப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான செய்தியாளர் சந்திப்பில், அலைசறுக்குப் போட்டியின் தூதுவரான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜான்டி ரோட்ஸ், திரைப்பட நடிகை ரெஜினா, டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகள் குறித்து அறிவித்தனர். இந்த போட்டியில், 200-க்கும் அதிகமான அலைசறுக்குப்போட்டி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும், பொதுமக்களும் இந்த போட்டிகளை காண சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.