2020ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி - சொகுசு டிக்கெட் ரூ.43 லட்சத்திற்கு விற்கப்படுகிறது
Aug 23 2019 7:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2020ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான சொகுசு டிக்கெட் 43 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
32-வது ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஜூலை 24-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்காக ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. லட்சக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் நிலையில், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பர டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். கோலாகலமான தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் 9 நாட்கள் நடக்கும் தடகள போட்டிகளை முழுமையாக பார்க்க வகை செய்யும் இந்த டிக்கெட்டின் விலை ரூபாய் 43 லட்சமாகும். சொகுசு இருக்கை வசதி கொண்ட இந்த டிக்கெட்டில் உணவு, உற்சாக பானங்களும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.