உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி - இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து
Aug 24 2019 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக சாம்பியின்ஷிப் பேட்மிண்டனில், அரையிறுதிப் போட்டியில், சீன வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
சுவிட்சர்லாந்தில், உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்று, காலிறுதிப் போட்டியில், சீன தைபேயின் தாய் ஜூ யிங்-கை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், சீனாவைச் சேர்ந்த, சென் யு பெய்-யை எதிர்கொண்டார். அவரை, 21 - 7, 21 - 14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.