நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கிடையேயான மாநில கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்பு
Aug 24 2019 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளிகளுக்கிடையேயான மாநில கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜீட்ஸ் பள்ளியில் உள்ள சர்வதேச கைப்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியை உதகை மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் இன்று துவக்கி வைத்தார். இதில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் ஜுனியர் மற்றும் சீனியர், பெண்கள் ஜுனியர் மற்றும் சீனியர் ஆகிய 4 பிரிவுகளில் 2 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றன.