ராமநாதபுரத்தில் மஞ்சுவிரட்டு போட்டி : ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Aug 26 2019 9:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடியை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள கண்ணன் கோவிலில், கோகுலஷ்டமி திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, காளைகளை விரட்டி பிடித்தனர்.
மஞ்சு விரட்டில், அடங்காமல் திமிறிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.