பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி : யோகா போட்டியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Aug 26 2019 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட ஃப்ரீ ஸ்டைல் யோகா அசோசியேசன் மற்றும் அசோசியேசன் ஆப் தமிழன் ஃப்ரீஸ்டைல் யோகா அமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
யோகா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டன.