19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
Sep 15 2019 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கொழும்புவில் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இந்திய அணி 33 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிதில் வெற்றிபெறலாம் என்ற மகிழ்ச்சியுடன் விளையாட தொடங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் சுழற்பந்து வீச்சாளர் அதர்வா அங்கோல்கரின் அபார பந்து வீச்சில் வங்கதேச அணி சுருண்டது. அதர்வா 28 ரன்களை கொடுத்து வெறும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணி 101 ரன்களுக்கு அவுட் ஆகியது. இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய கோப்பையை வென்றது.