இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான டி-20 போட்டி மழையால் பாதிப்பு : ரசிகர்கள் ஏமாற்றம்
Sep 16 2019 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி, மழையால் கைவிடப்பட்டது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் தர்மசாலாவில் நேற்று நடைபெறவிருந்தது. ஆனால், அங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இவ்விரு அணிகளுக்கான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி, நாளை மறுதினம் மொகாலியில் நடைபெறுகிறது.