அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா - உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில், வடகொரிய வீரரை வீழ்த்தியதால் முன்னேற்றம்
Sep 19 2019 8:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில், 65 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வடகொரியாவைச் சேர்ந்த ஜோங் சன்னை எதிர்கொண்டார். இதில் 8-க்கு 1 என்ற புள்ளி கணக்கில் ஜோங் சன்னை வீழ்த்தி, பஜ்ரங் புனியா வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். மேலும், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 65 கிலோ எடைபிரிவின் இறுதிச் சுற்று, நாளை நடைபெறவுள்ளது.