திருச்சியில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான பேட்மிண்டன் போட்டி : மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Sep 20 2019 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான பேட்மிண்டன் போட்டியில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் நோக்கில், நடைபெற்ற இப்போட்டி, முசிறியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 கல்லூரிகளிலிருந்து அணிகள் பங்கேற்றனர்.
பெண்கள் பிரிவில் திருச்சி டி.ஆர்.பி பொறியியல் கல்லூரி அணி முதலிடத்தையும், அரியலூர் அண்ணா பல்கலைகழக உறுப்புக்கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி அணி முதலிடத்தையும், சமயபுரம் ராமகிருஷ்ணா கல்லூரி அணி இரண்டாவது இடத்தையும் தக்கவைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் திருச்சி மாவட்ட பேட்மிண்டன் கழக தலைவர் விஜயகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர்.ரஞ்சித்குமார் ஆகியோர் வழங்கினர்.