உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை எதிர்கொள்கிறார் இந்திய வீரர் அமித் பன்ஹால்
Sep 20 2019 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டுள்ள, இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பன்ஹால், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று நடைபெற்ற 52 கிலோ எடைப் பிரிவிலான போட்டியில், இந்திய வீரர் அமித் பன்ஹால், கஜகஸ்தானைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர், சாகேன் பிபோஸினோவை எதிர்கொண்டார். இதில், 3-க்கு 2 என்ற புள்ளி கணக்கில் அமித் பன்ஹால் வெற்றி பெற்று, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அமித் பன்ஹால் பெற்றுள்ளார். நாளை நடைபெறுவுள்ள இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ராவை அமித் பன்ஹால் எதிர்கொள்கிறார்.