உலக மல்யுத்த போட்டியில் இந்தியா மீண்டும் சாதனை - மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்
Sep 20 2019 8:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில், 65 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வடகொரியாவைச் சேர்ந்த ஜோங் சன்னை எதிர்கொண்டார். இதில் 8-க்கு 1 என்ற புள்ளி கணக்கில் ஜோங் சன்னை வீழ்த்தி, பஜ்ரங் புனியா வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
65 கிலோ எடைபிரிவின் இறுதிச் சுற்று, இன்று நடைபெற்றது. இதில் மங்கோலிய வீரர் துல்கா துமூர் ஓச்சீரை, எதிர்கொண்டார். இதில் 8-க்கு 7 என்ற புள்ளி கணக்கில் துல்கா துமூரை வீழ்த்தி, வெண்கல பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா.