நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து போட்டி - அரையிறுதியில் மாலத்தீவை தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு முன்னேறிய இந்தியா
Sep 28 2019 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
18 வயதிற்குட்பட்டோருக்கான தெற்காசிய கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் மாலத்தீவை தோற்கடித்து இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் அரை இறுதியில் இந்தியா நேற்று மாலத்தீவை சந்தித்தது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, 7வது நிமிடத்திலேயே நரேந்தர் கலோட் அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து முகமது ரபி கோல் அடிக்க, இடைவேளையின் போது இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இந்திய அணி, 79-வது நிமிடத்தில் மன்வீர் சிங் மற்றும் 81-வது நிமிடத்தில் நிந்தோய் ஆகியோர் கோல் அடிக்க இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.