தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்திய அணியில் இடம்பிடித்தார் தமிழக வீரர் அஸ்வின்
Oct 1 2019 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் பெயரை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்க உள்ளது.
இந்நிலையில் இன்று, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேப்டன் விராத் கோஹ்லி, துணைக் கேப்டன் அஜின்க்யா ரஹானே, ரோகித் சர்மா, மயான்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, சஹா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். சமீபகாலமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் நீக்கப்பட்டு, விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டுள்ளார். நாளை தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரோகித் சர்மா முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.