இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்
Oct 2 2019 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெனாப்பிரிக்க கிரிக்கெட் அணி, டி20 தொடரில் பங்கேற்ற நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், துணை கேப்டன் ரஹானே, ரோகித் ஷர்மா, அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஷ்வின், ஜடேஜா, சாஹா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ரிஷப் பன்ட் நீக்கப்பட்டு, விருத்திமான் சாஹா சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.