ரஷ்யாவில் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி இன்று தொடக்கம் - இந்தியாவின் மேரிகோம் மீண்டும் பட்டம் வெல்வாரா?
Oct 3 2019 7:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் அதில் மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் இன்று தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் 7-வது முறையாக மகுடம் சூடும் முனைப்புடன் களம் காணுகிறார். ஆனால் முந்தைய போட்டிகளில் மேரிகோம் 48 கிலோ பிரிவில் பிரமிக்க வைத்தார். ஆனால் அந்த பிரிவு ஒலிம்பிக் போட்டியில் இல்லாததால் மேரிகோம் இப்போது 51 கிலோ எடைப்பிரிவுக்கு மாறியுள்ளார். இந்த பிரிவு அவருக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னாள் சாம்பியன் சரிதாதேவி மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.