ஜப்பானில் நடைபெற்ற உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி : சமோவா தீவி அணியை துவம்சம் செய்த ஜப்பான் அணி
Oct 6 2019 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக ரக்பி காலிறுதி போட்டியில் ஜப்பான் அணி சமோவா தீவு அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்ததை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஜப்பானில் உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காலிறுதி போட்டி ஒன்று டோயோட்டா நகரில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த சமோவா தீவு அணியை ஜப்பான் அணி எதிர்கொண்டது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தது என்றாலும் தொடக்கம் முதலே ஜப்பான் வீரர்களின் கை ஓங்கி இருந்தது. ஜப்பானிய வீரர்களின் கோல் போடும் திறனை சமோவா வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. முடிவில் 38-க்கு 19 என்ற கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.