ரக்பி உலகக் கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்திய இங்கிலாந்து : 39-10 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி
Oct 6 2019 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோவில் நடைபெற்ற மற்றோரு ரக்பி உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
டோக்கியோ நகரில் க்ரூப் சி பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் கடுமையாக மோதின. ஆட்டத்தின் போது அர்ஜெண்டினா வீரர் ஜானி மே இங்கிலாந்து கேப்டனை தள்ளிவிட்டு விளையாடியதற்காக ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அர்ஜெண்டினா அணி 14 வீரர்களுடன் விளையாடியது. இதன் பின் இங்கிலாந்து வீரர்களின் கை ஓங்க ஆட்டம் முடியும் வரை கோல் மழை பொழிந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 39க்கு 10 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.