பாரிஸ் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்க்க நடவடிக்கை - மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
Oct 8 2019 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
"பாரிஸ் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்க்க முயற்சி எடுப்போம்,'' என மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு பாரிஸில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உள்நாட்டில் விளையாட்டு எந்தளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு கபடி சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார். நாம் நினைத்த விளையாட்டு கலாசாரத்தின் துவக்கம் இது தான் எனக் கூறிய அவர், தற்போது இது நிஜமாகி வருகிறது என தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் எப்படியும் கபடி இடம் பெறச் செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என கிரண் ரிஜிஜூ உறுதியளித்தார்.