திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி - தமிழகம், கேரளாவில் இருந்து 21 அணிகள் பங்கேற்பு
Oct 8 2019 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
மணப்பாறையில் மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் உள்ள அணிகள் என 21 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், சென்னை அணியும் திருநெல்வேலி அணியும் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் கன்னியாகுமரி அணி, நாகை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.