இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி
Oct 9 2019 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் நாளை தொடங்க உள்ளது. இதையொட்டி, இந்தியா - தென்னாப்பிரிக்க அணி வீரர்கள், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். நாளை நடைபெறும் போட்டியில், இரண்டு அணி வீரர்களும் முழுத் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.