புனேயில் நடைபெற்று வரும் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - மயங்க் அகர்வால், புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ரன் குவிப்பு
Oct 10 2019 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புனேவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இத்தொடரின் இரண்டாவது போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் ஷர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அப்போது 14 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். பின்னர், மயங்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார். 42 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது.