கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த பவுண்டரி முறை நீக்கம் : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு
Oct 16 2019 8:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த பவுண்டரி முறை நீக்கப்பட்டதற்கு, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி முறையை நீக்குவதாக ஐசிசி நேற்று அறிவித்தது. ஐசிசி தொடர்களில் போட்டி சமனில் முடிந்தால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, போட்டி சமனில் முடிந்த பிறகு, சூப்பர் ஓவர் முறையிலும், ஒரே ரன்கள் எடுக்கப்பட்டால், வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை மீண்டும் மீண்டும் சூப்பர் ஓவர் முறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஐசிசியின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பவுண்டரி முறை நீக்கம் என்பது முக்கியமான முடிவு என்றும், இது போட்டி சமனில் முடியும் வேளைகளில் வெற்றியாளரை நியாமான முறையில் தேர்ந்தெடுக்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.